திங்கள்

அக்கா!


அன்பிலொரு அன்னை
தியாகத்திலொரு தந்தை 
பழமொழிமுதல் பஞ்சாங்கம் வரை 
அறிவுரை சொல்வதில் பாட்டி.
ஆசையாய் கொஞ்சலில் அக்கா
அன்பாய் கண்டிபதிலொரு அண்ணன்
அக்கரை காட்டுகையில் தங்கை.
ஆசை பொருளை தம்பி தங்கைகலுக்கு விட்டு கொடுக்கையில் கொடைவள்ளி.
காய்ச்சலின் கவனிப்பில் மருத்துவர்.
வீட்டுபாடம் சொல்லிகொடுக்கையில் ஆசிரியை.
ரகசியங்களை சொல்லுகையில் சகி(தோழி) 

ஞாயிறு

தமிழ்நாடுக்கு தமிழ்மொழி போல

காந்தியின் அஹிம்சைபோல 

தீண்டாமை,பகுத்தறிவு தந்தைபெரியார் போல 

கவியின் கவியே.

எந்தன் முண்டாசுபாரதியே 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....


பாடலின் வரிகலாயினும்
தேசத்தின் தியாகமாயின் 
மொழிக்கு அங்கிகாரமாயினும் 
கவிதையின் கவியுமானவரே 
எந்தன்-மஹாகவி

சிவனின் பார்வதியைபோல் 
என்னுல் என்றும் நீரே*
#புதுமைப் பென்னாய் 
#புரட்சிபென்னாய்
#பென்னின் வளர்ச்சி
உம்மால்கிடைக்கபெற்ற
விதைகல் போல் 
எட்டாகனியின் சுவையையும்
சுவைத்தோம் !
புதுமைப் பென்கலாய் சிறக்க!
சிறகினிலே பறக்கிறோம்!


முல்லயாய் சிரித்தவள்
ரோஜாமாலையால் 
அலங்கரிக்கபடுகிறாள்.

ஆனந்ததில் ரசித்தபேனர்கள் 
இப்போதெல்லாம்
கன்னீர் அஞ்சலியாய்
மட்டுமே காட்சியளிக்கும் 
சித்துமுல்லை

அஃகாமை

இரைதேடும் இளம் 
புராவொன்று 
இனையாலுக்கு 
இரைத்தேடி,
குடில்_கூண்டு 
அமைப்பதில் 
அஃகாமையெனும்  
அன்பு ஊற்றெடுக்கிறது ஆன்புறாவினால் இல்லத்தில்...

சனி

 
மஹாகவியின் 
முண்டாசில் பிறந்த 
மதியிவள்....

 கவிக்குயில்_ம(தி)ஹாகவி 


தேடலில்லா பொழுது ??


கவியோடு சேராத 
வரிகளும்  

வினாவில்  தேடாத 
விடைகளிலும்,

கசக்காதநாவிற்கு 
கர்கண்டின்சுவையும் 
இருந்தென்ன-பயனோ?? 



சந்திரசூரிய

உச்சிவெயிலின் 
உஷ்னத்தை
தனிக்க
வானிலிருந்து 
குலியல்போடும் 
சந்திரன்... 

சபத யுத்தம்...

சத்தமில்லாமல் 
யுத்தம் செய்கின்றன 
வார்த்தைகள்.

உனக்காக வரிகள் 
எழுதப்படாவிடில்

இனிவரும் 
கவிமடலில்
இலக்கண பிழயாய் 
நிற்போமென 
சபதமெடுக்கென்றன...

வியாழன்

தூவல்(பேனா)ரசிகை

எழுத்தானியானவனே
காதலனை விட
உந்தன்கரங்கலையே
இருக்கி அனைத்து 
அழகியகாதலை
அரங்கேற்றுகிறேன்
உன்கரம் பிடிக்கையிலே
எந்தன் இதயம் 
பல்வேறு துடிப்பினை
அழகிய நினைவாய் பதிவிடுகிறது 
உன்னிடத்தில்.
உன்னை எந்தன் நிழலாய்
ஓடி ஓடி வந்து 
ஒவ்வொரு நொடியின் 
இதயதுடிப்பை துள்ளியமாக 
பதிவிடுகிறது
இதுவறை எந்தன்
இதயதுடிப்பு அவனுக்கென்று
நினைத்தேன்
உன்னை பிடிப்பதில் 
என் எண்ணங்கள் ஊற்றெடுக்கின்றன 

இமைகளில் தொடங்கி இதயம் வரை!



அவன் கண்களிலிருந்து
ஊடுருவிய 
காதல்
வாசமாய்
என் சுவாசம்தொட்டு
என் தொண்டைகளில்
நடனமாடி 
பயணிக்கிறது 
எந்தன் 
இதயம் நோக்கி
லப் டப் லப்டப் என்று!

செவ்வாய்

கட்டைவிரல் காதலே!!!



உன்னை முத்தமிடாமல் 

தூங்க 

மறுக்கிறது 

என் கட்டை விறல் 

காதலியே!!!


என்னவெனின் 

கட்டைவிரல்!!! 


கவி பொய்யுரைக்குமாயின்🔥

 


கன்னகியின் கர்ப்பிர்க்கு 

தழல்எரித்தால் அன்று 

இன்று உன்சந்தேகத்திற்கு  

எதை எரிக்கட்டும்🔥

எரித்துவிட்டேன் 

தட்டச்சுகலை 

உன்னை 

பொய்யுரைக்குமாயின்🔥

எழுத்துக்கள்-நானாக பொருள் நீயாக


எழுத்துக்கள் 

மட்டும் நான் 

அர்த்தம் 

என்றும் நீயே




கவிகள் பிறப்பெடுக்கிறது உன்னிடம்!

 



சுமாரான 

கவிதைகலையே 

நான் எழுதுகிறேன். 

உன்னிடம் மட்டுமே 

கவிதைகள் 

பிறப்பெடுக்கிறது

இருவிழியும் ஒரு இதயமும் !!!



இமைமூடி 

இமைதிறந்து 

இந்த கிருக்கியை 

கவிபாட அழைக்கிறாய். 

இமையிலும் 

இருவிழியிலும்

இமைத்துகொண்டிருப்பது 

நீயும் 

துடித்துகொண்டே 

எழுத துடிக்கும் 

நம் இதயமும்!!

நீ கிறுக்கிய கவி!!!


கனவில்கூட சொல்ல 

 மறந்தவயைய் 

கவிதையில் 

சொல்வாயென்று 

அறியாமல் 

இருந்தேனடா....

கவிழ்ந்தேன் உன்னாலே

கவிதைக்கு கவி சேர்க்கும் முயர்ச்சியில் உன் தூக்கம் கவிழ்ந்ததேனோ!

ரோஜாவும் உன் நினைவும்

உன்னோடு 
பேசாத இரவுகள்
என்கனவில் வரமறந்து 
நீ உறங்கிய நாட்களில் 
நான்புலம்புவதெல்லாம் 
நீ வாங்கி கொடுத்த 
காதல் ரோஜா 
மலர்செடியுடனே
கொட்டி தீர்க்கிறேன்..

மழை மதி

இனிப்பிற்கு
ஈடில்லா சுவை,
தேனீக்களின் 
இல்லம் என்று
நினைத்தேன்

மழையின்
சுவையை 
புசிக்காதவரை



மழலை


ஆசைக்கு 
அடம்பிடிக்கவும்,
உணவூட்டுகையில் 
உரங்கியதை போல 
ஏமாற்றவும்,
அனைத்தும் 
கற்றுக் கொடுப்பவலுக்கு 
கன்னாமூச்சி விளையாட அழைப்பதும்
மழலைக்கு மட்டுமே தெரிந்தது..

ஆலோசக தோழர்


தோழமை 
கனவு 
எதிர்பார்ப்பு
ஏமாற்றம்
உணவு
உறக்கம் 
பசி 
இவையனைத்தும் 
வன்முறையால் 
சிறைப் பிடிக்கிறது.

காதல் இல்லா
இலக்கணம்
ஆலோசகராய்... 

கல்வன்!

 

எத்தனை வருடம் 
கனவில் கூட 
வராமல் போனாய் 

இன்று மட்டும் எப்படி 
வந்தாய் 
அழைக்காமலே... 

கிருக்கியிவள் அவனிடத்தில்



நடப்பவை அனைத்தயும் 
உன்னோடும்
உன் நினைவோடும் 
மட்டுமே 
ஒப்பிட்டு பார்க்க 
தோன்றுகிறது,
இந்த கிறுக்கிக்கி

இனியன்

இசையின் 
இரவில் 
இரவலாய் 
இவனின் 
இசையமைப்பில்
இமைகள் 
இமைக்கா நொடிகலாய்
இணைக்கிறது
ஒவ்வொரு ஞாபகத்திலும்.

நிற்கும் ....வினாக்களின்... மாப்பிள்ளையிடம்

கோப்பையோடு 
வந்து நிர்க்கும்போதெல்லாம்
என் வினாக்கலின்
பதில்களை 
உன்னைபோலே
சொல்லவேண்டும்
என ஏங்குகிறது
ஒவ்வொருமுறையும்
வரன்கேட்டு வரும் 
மாப்பில்லையிடம்

ஞாயிறு

எந்தன் காதல் வயது???


என்கவிதோன்றிய-நாளே 

எந்தன்-காதல்

பிறந்தநாள் என்பேன்..


2017 ஜூலை மாதம் 

கவிக்குயில் எனும் 

அழகிய குழந்தை 

பிறந்தது (ப்ளாக்கராய்)

4 வயதை கடக்கிறது....




நம் காதலின் நிறம் என்னவோ !!!


ரெட் பிலட் ரெயினின் நிறமதுவே 








சொட்டு சொட்டாய் 

விழும் மழையோடு 

சேர்ந்து விழுகிறேன்

நானும் உன்னிடத்தில்...


மழையின் ஒலியில் 

நம் சங்கீத் இசைக்க 


எந்த மதம்  

என்போருக்கு 

காதல் மதம் என்போம் 


நம் ரத்த பந்தமாய் 

மழையையே 

நம் சொந்தமாக்குவோம்!!!


மழையில் 

வெளிவராதோர் 

வெய்யிலும் 

நம் பங்காளியாக்குவோம் 


வெள்ளைமழை காதலே 

ரத்தசொந்தமாய் 

சிவப்புமழையை 

பொழியச்செய்வோம் 


ரெட் பிலட் ரெயினின் நிறமதுவே 

எந்தன் காதல் நிறம்...






காத்திருப்பு கவிமடல்!!

பார்க்காமலே காதல் கொள்வேன்

நீ ஒரு கவிஞன் எனில்,,,,

பேசாமலே ரசிப்பேன்

நீ ஒரு ஊமை எனில் ,,,

உன்வரிகளாக நான் மாறுவேன்

நீ பாடுகையில் ,,,,

என் கவிகளுக்கு காவியதலைவன்

முதலும் முற்றும் நீ ,,,,,

என்னை  செதுக்கும் 

எந்தன் சிற்பியே 

என் அருகில் வந்து

அன்புகாதல் 

மாரியை செலுத்து!!!


கடிதங்களும் 

கவிதை வாக்கியங்களுடன்

சேர்ந்து நானும் உனக்காக



மழையானவனே!!

 












குடையோடு வருகிறாய்
உரிமையில் 
மழைச்சாரலாய் 
விழுகிறாய்  
என்மனதில்...


மழையானவனே!!

 

குடையோடு வருகிறாய்

உரிமையில் 

மழைச்சாரலாய் 

விழுகிராய் 

என்மனதில்...

வெள்ளி

தோழியின் தேடல்!!

 



தேடல் இல்லா 

தோழிகளுக்கு 

தேவையைக்கூறி 

பயணத்தோடு -பாதையை-

அமைத்துதருகிறேன் !!!


என் தேடல்-தேவைகலை 

மறந்த படி


அவள் லட்சியத்தில் 

நானும் பூரிப்புகொள்கிரேன்/.....

புதன்


மாரி மாரி பொழியும் மாரி எனும் மழையே!!!





தினம் தினம் 

உன்னோடு ஒரு போராட்டமே 

வரவேண்டும் என 

வேண்டுகையில்,,,

வரமறுகிறாய்.


வேண்டாம் என்று 

வேண்டுகையில்-வந்து 

எம் 6மாத உ ழைப்பைப்

தும்சம் செயகிறாய் 

ஒரு அரைமணி நேரத்தில் !!!








மறிவேண்டுமென்று

பிச்சைவரை 

என் உரோர் 

உன்னை வரவேற்க 

காத்ததுண்டு!!!





பிம்பமே எந்தன் அலுவலக நண்பர்!!!









எந்தன் மன அழுத்தத்தையும் 

கோபங்களையம் 

கையாள தெரிந்த ஒரே நபர் 

எந்தன் அலுவலக  பிம்பம்...


அழுகையோடு ஆரம்பிக்கும் 

என் உரையாடலை 

சாந்தப்படுத்தி,

சாந்தமாய்,

வழியனுப்பிவைக்கிறது 

ஒவ்வொருமுறையும்.


 

வீட்டிலிருந்து வேலை 







ஓடி ஓடி தேய்ந்த -

கால்களுக்கு 

ஓய்வு வந்தது

ஊரடங்கு-பெயர்கொண்டு 


ஓயாமல் ஓடும்

என்போராட்டத்திற்கு 

வேலைபளு 

மட்டுமே மிஞ்சியது...







 



திங்கள்

 

மோனுவும் மதியும் !!!

90ஸ் மழலையாக  ஆஹ நான் 

2K19 மழலையாய் ஆஹ நீ 


தேதி மற்றும் கிழைமைகளும்  

ஒன்றாகவே நாம்பிறந்தோம் 

(25 ஆம் தேதி, வெள்ளி கிழைமை)


முதல் எழுத்தும் ஒன்றி 

மோனையாய் போனது 

மோனா உன்னிடத்தில் 

இப்படிக்கு ((M)) (mona) (mathi))


இரண்டாம் எழுத்துக்கள் 

எதுகையையே எதிர்த்து

இடம் தெரியாமல் போனது,,, 

(na la )(மோ*னா* மா*லா* ) 


ஒட்டி பிறந்தால்  உடன்பிறப்பு 

இரட்டையர்கள் என்பர்கள் ,


ஒட்டாமல் பிறந்தும் 

ஒன்றிணைந்தோம்!!!

 

சித்தியின் பிள்ளையாய் என்றும் நீ 

மோனச்சிட்டு குருவியின் அன்னையாய் 

என்றும் நான்!!!!! 


(அச்சு)~ (குட்டி)~(த ங்க)~ பாப்பா 





















வள்ளுவனின்  குறலியிவள் 
திருக்குறளி பாப்பா >>>>

அவ்வையின் ஆத்திசூட்டியில் 
முதுமையடையா  
மழலை கிழவி இவள்...

குறும்புகளில் கர்ணனியானவள் 

கிறுக்களுக்கும் 
பிடித்த ஓவியம் 
என் ஆச்சு பாப்பா,

கரும்புக்கு 
இனிப்பு ஊட்டுவாள் 
அவள் கடிக்கையில் 
வழியும் சாறுபோல ....

சிறுபுள்ளிகள் 
அழகிய கோலமாவதை போல 
இவள் புள்ளியாக தோன்றிய 
எங்கள் தேவைதை (ஏஞ்சல் )

மகிழ்ச்சியில் 
பெருகும் ஆராய் 
எங்கள் வீட்டில் 
இவளோட நினைவு 


அச்சு எங்கள் மகிழ்வின் 
அடையாளம்....










வியாழன்

 


நான் தானமாய் கொடுப்பதை 

நீ பகிருகையில் 

புலமை வாய்ந்தவனாகிறாய் நீ 

(அறிவு )


 


என்னை பரிமாற்றி கொள்கையிலே 

என் தோன்றலின் வெற்றி 

(புன்னகை)


 


பொய்யுரசிக்காத 

அரிச்சந்திரர் 

கைகளும் 

நடுங்கிக்கொண்டுதான் 

போகின்றன

குளிர்கால பருவங்களில்.

 


விடுதி_இல்லம் 



வெள்ளிக்கிழமை 
வீடுகளின் ஆசையும்,,,
 
திங்கள்கிழமைகளில் 
விடுதிகளின் வெறுப்புமே!

என் வாழ்வின் 
சொர்க-நரக லோகங்லாய். 


ஆசை கனவு செல்வங்கள்!!!


ஒவ்வொருவரின் 

இன்றைய தேடல்களும் 

அன்று தொலைக்கப்படடவை.



 

மழலையின் 
மகிழ்ச்சியே 
அம்மாவின் 
முதல் ரீங்காரமாகும் 
 

ஞாயிறு



என் ஆசை
ஒவ்வொன்றையும்
நிறமூட்டி

வானில்
செலுத்திகிறேன்
பட்டமாய் !!!


பொய்யுரை புன்னகை!!!











மகிழ்ச்சியெனும்
பொய்யுரை
திரையாய் //////

கிணற்றில்
இருளின் சூழ்ச்சியால்
நீந்திவர-முடியாதவளாய்
துடிக்கிறேன் நான்...

செவ்வாய்


ஏழை பசியின்
உணவு -உழைப்பு
அன்று!

உயிர்கொல்லி
நஞ்சுகள்
அரசியல்வாதிகள்
அன்றும் இன்றும்

துயரம் துடைக்க
விளம்பரத்தோடு
காகித நோட்டுகலை
கிள்ளிக்கொடுக்கும்
அரசாங்கம்.

கண்ணீரிலே
கரைந்து
மெலிந்துபோன
உடல்கள்...

சாட்சியிருந்தும்
சாபமாய்
வாழ்வை அழிக்கமுடியாத
துயரமே மூன்று
மழலைகள்.

ஜெயராஜ் பெனிக்ஸ். 














ஒவ்வொரு
துளி ரத்தமும்
தெரிந்தவர் தெரியாதோர்
கண்களில்
குருதியோடையாய்
இன்றும்
வற்றாத தெப்பமாய்
நிற்கிறது ....



புதன்


இமைச்சொட்டு 















இருசொட்டு கண்ணீர்
மைகொண்டு
இருவரியே எழுத நினைப்பேன்!!

உள்ளமென்ற ஏட்டின்
காயங்களுக்கு-என் கண்ணீர்
எழுத்துக்கள்
மருந்தாகும் என்பதால்
மயிலிறகை போல
என்மனமென்ற எட்டினில்
கிறுக்கி கொண்டிருக்கிறேன்
நானின்று !!!!!!!!!!!!





நிலையில்லா அண்டம்
நிஜமில்லா புரளி
உடன் வராத நிழல்
உறவுகளின் நஞ்சு

நிரந்தரமில்லா வேலை
வட்டி முதல்
குட்டி வரை கடன்கள்
சுமைகளே வாழ்க்கை
சுமையாய்
நிம்மதி இல்லா மனது
எதை கண்டு
அஞ்சபோகிறது?

எப்பொழுதும் அழுத்துகொன்டே
இருக்கும் உள்ளம்.
ஆறுதலுக்கு ஆளில்லாமல் போய்
எனக்காகவும் அழுகிறதே.

எதிர்பார்ப்பு ஆ சையேதுமின்றி
தனிமையே மேற்கொள்ள வேண்டி
எண்ணத்தோன்றுகிறது மனது...







திங்கள்


ஆனந்த (அழுகை )கண்ணீர் 













ஆனந்த கண்ணீரை
அனைவருக்கும்
அளிக்கிறேன்

என்வலிகளின்
கண்ணீரை
எவரும்
அறியாதவாறு......

சுமைதாங்கியானவள் !!!










சுமைகளை சுமப்பதனால்
என்னவோ 
நானே
சுமையாகிப்போகிறேன்
இப்போதெல்லாம்,,,,,


வெள்ளி


நாம் ஒரு ஹைக்கூ !!!



பொருள் உனதாக ,
கவியெனதாக..
இருவரால் அழகாகும்
அந்த ஹைக்கூக்கள்...




அர்த்தங்கள் அழிந்தனவோ !!!















அழகாய் அழகூட்டுவாய்
திறமைகளுக்கு,

இனிமையான குரல்கொண்டு
இலக்கியம் பேசுவாய்,

நயமும் பொருளும்
கவியானால்
அவையே
நாமாவோம்...




வியாழன்


ஒத்திவைப்புகள் !!!














தடுமாற்றமே
தடையானால்
இடமாற்றம்நிகழுமா 

சனி


என் இம்சை பாட்டி!!!


நிலவை படைத்த
வானம் நீ
என் ருக்கு பாட்டி,,,,











சேவல் கூவலுக்கும்
காக்கை கரைத்தலுக்கும்
முன்னெழுந்து
ஒலி ட்டுவாயே (சத்தம் )
அவையே உந்தன்
இம்சையான
இனிய சுப்ரபாதம்.

காலை முதல்
மலை வரை
கதிரவனுக்கு
சந்திரனுக்கும்
ஒரு நேரம்
காட்டும்
கடிகாரமே உந்தன்
கால்களும்
உந்தன் வாயும்.

ஓய்வெடுக்கும்
உன் வயதும்
உன் சுறுசுறுப்பில்
ஓய்வெடுக்க மறுக்கிறது...




மகளின் உருக்கமான கடிதம்!!!








அம்மா வீடு 
பிறந்து வலந்து
வாழ்ந்த வந்த
அம்மா வீடு (திமு)

ஒருநாள்
வந்துபோகும்
விருந்தினர் 
வீடாகி 
போகபோகிறது...
என்
திருமணத்திற்கு பின்.



வெள்ளி



அக்காவும் கடவுளே!

என் பருவ
பொம்மைகள்
உயிர்பெற்றதனால்..,













என் விளையாட்டுக்கு
உயிர் பொம்மையை
படைத்து கொடுத்தாயே
கொட்டும் ஒவ்வொரு
துளி நீரின் வழியும்
என்நன்றிகள்,

இப்படடிக்கு சித்தி,,,,,,



ஞாயிறு

முதுமை!!!











நான் விழுகையில்
என் கரங்களுக்கு

விழுதானது
என் கைப்பிடி_கோல் 


தெருப்பாடல்

இறைவனின் பிழையில்
சிதறிய துகள்கள்
சாலையில்_ இசைமூட்டி 
சம்பாரிக்கின்றன
பிச்சையெனும்_பாத்திரம் 


வெள்ளி

வாடாதமலரின் வீசாதவாசம் 











அறத்தை
விரும்பியே
சொல்லமறந்த
என்காதல்

செவியில்லாமல்
போன
என்காதலுக்கு
ஏட்டுதாலில்
மட்டுமே
ஒரு பிரப்-போசல்
வருடம்தோறும்
பிப்14






கண்ணில்லா
காதலுக்கு
கற்பனையில்
ஒரு  பிரப்-போசல்.

கரமில்லா
காதலனுக்கு
கனவில்
கைகோர்த்தபடி
நடைபயணம்!

வாடாத  மலர்கள்
வீசாத வாசம்
காகிதபூக்களாய்
என்காதல்!!!








காதலின் (ஆச்சரிய)குறி !!!





பிழையில்லா
இலக்கணப்பிழை 
என்காதல்!!


செவ்வாய்

மாற்றமில்லா கணம் 











ஒரு கோப்பைதேநீர்
பரிமாறும்
கணமே
வாழ்க்கைத் துணை
முடிவாகிறது,,




ஞாபக நாணல்!!!










என் மனமும்
அசைந்தாடுகிறது
உன் நினைவாலேவரும்
ஞாபக நாணலில்..


அசையாத தென்றலின்
நடுவில்,
உல்லாச ஊஞ்சலில்
நான் மட்டும் ஆடியபடி
என்கொண்டாட்டங்கள்


வெள்ளி

மிமி நட்ச்சத்திரம் 









இன்றும் என்றும்
உன்னோடு
உன்னையே ரசிக்கவே
நட்ச்சத்திர அவதாரமாய்
வரம் பெற்றோம்
இப்படிக்கு
மின் மினி பூச்சுகள்

வானம் விரித்த சிறகு !!!












நினைப்பை  எல்லாம்
காட்சியாய்,,
என் இமைகளின்
சொர்கலோகமாய்,,
என் சின்னசிறு
கற்பனை  ஆசை
கனவுகளோடு
உன்னையே உற்றுநோக்கும்
எந்தன் கண்கள்..

மதிக்கும் கதிரவனுக்கும்
அடைக்கல அன்னையாய்
வானம்....

பிரிவுகளை உணரவைக்க
பிரிந்து சென்று
அதிகாலை காக்கை
கோழிகூட்டதோடு
துயில் எழுப்பும்
கதிரவன்,

கதிரவனின் கடும்வெயிலை
தன்  சாந்தத்தோடு
குளிரின் நிலவாய்
ஜொலிக்கும் நிலவு...

பணிவேலை முடிந்து
வாசலில் நாற்காலியிலமர்ந்து
உன்னை ரசிக்கவரும்
இல்லத்தரசிகளுக்கு பிள்ளைகளுக்கும்
தொடுவானிலிருந்து நீலசோறு
ஊட்டுகிறாயே நிலா தாயே !!!

நாட்கள் புரண்டு
பகல் நிலவாய் சிலநாள்
மூன்றாம் பிறைநிலவாய் சிலநாள்,
இயற்க்கை எழிலோவிய
பிறை அழகே !!!

உன்னை தரிசிக்கவே
மின் மினி பூச்சு பட்டாரம்
பூமியில் இருந்து பறந்து
வானில் தஞ்சமடைகின்றன
இவைகளின் புது அவதாரமோ
 "நட்ச்சத்திர கூட்டமாய் "



என்வாழ்வின் நீலம்
எவை என்பதை
ஒருமுறைஅண்ணார்ந்து
பார்க்கையில்உணர்கிறே ன்
இன்னும்  எவ்வளவு
சிறக்க வேண்டும் என்பதை.


என்கனவுக்கும் ஆசைக்கும்
எல்லையில்லை என்பதை
சுட்டி காட்டவே
விரிந்தது போல
இவ்வானம் ......

சிறகு இல்லையென்றாலும்
சிறப்பேன்
லட்சியத்தில்
இவ்வானம் வரை......














புதன்



தனிப்பேரழகி தாமரை(தா மறையே)










குளத்தின் பெருமையும்
வேடிக்கை பார்க்கும்
கண்களுக்கு
குளிர்ச்சியுமானவளே

ஏறி குளங்களின் 
குலஅழகியே 

ஆலயங்களிலும் ஆண்டவரை
அலங்கரிக்க  உன்னுருவம்
வேண்டுமடி தாமரையே


மலரின் இன்ப அள்ளியே
தாவி பரிபவரை
தாக்களிக்க வைப்பாயே
தனித்திருப்பதின் அழகு
தாமரையே சாரும் 


யார் வரவோ












பூமிக்கடியில்
வரியெடுத்து
மழையின் சத்ததில்
இசையமைத்து
தூதுபுறாக்கல் மூலம்
வானில் பறந்து
நம் காதலை
சிறக்க செழிக்க விடுவோமா

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....