புதன்

கடிகாரம்

முள்கள் குத்துமாம் 
உந்தன் முள்கள்-
என்னை சுறுசுறுப்பாகின்றன -கடிகாரம் 


வேலிக்காத்தான் முள்

வழிப்போக்கனான எண்ணை குத்தியும் 
என்னிலிருந்து உன்னை உடையாமல் 
வணங்கிஎடுக்கிறேன் -வேலிக்காத்தான் முள் 

ஆயுத எழுத்து..!!

சத்தமிடாமல் முத்தமிடுகிறது-பேனாமுனை 
ஒவ்வொரு ஆயுத எழுத்திலும்..!!

புத்தகம்

பாடத்திட்டங்கள் வந்தபோது தேடாதநான் 
உன்னைத்தேடி திரிந்தேன் நாளைத் 
தேர்வு என்பதால் -புத்தகம் 

  
பள்ளி முதல் கல்லுரிவரை, 
தேடல் முதல் தேவை வரை அனைத்திலும் 
அடம்பிடிப்போம். 
உன்னிடம் வாங்காத 
அடிகளும் இல்லை, 
என்னை தொல்லைசெய்தே திட்டுகளை வாங்கிசெல்வாய் என்னிடத்தில் நீ....

திங்கள்

*மனிதாபியத்தின் தேடல்!!

தொலைந்துபோன நேயம்/இரக்கம்*
சிப்பிக்குள் முத்தாக, சிற்பியின்-சிந்தனைக்கேற்ற சிலையாக எவ்வுயிரிடத்தும் குறைவில்லா-அன்பை நிறைமனதுடன் காட்டுவதன்றோ ***மனித நேயம்***
மானுடர் இரக்கத்தில் மட்டும்பிறப்பதில்லை-மனித நேயம்! அன்பனைத்தையும்-அள்ளித்தந்தவளை, அனாதைஇல்லத்திற்கு தாரை வார்க்கின்றான்

தொலைந்த ஆசைகள்!!!


இரைதேடுதல் இன்பம் அன்று -இதயம் 
தொடுதலே இன்பம்.. 

கல்லூரியில் பட்டய படிப்பிற்கான 
ஆணை பத்திரமாகவந்தபோது பெறாத இன்பம் 
பதின்பருவ தோழிகள் பாசமிகு சகிகளானது,
வேதியல் ஆய்வகத்தில்  கலப்படமான உப்பையே 
கலப்பினம் செய்தது, வகுப்பைவிட்டு வருவாயா?
வாசலைத்தாண்டி வருவாயா? என 
தோழிகளுடன் விண்ணைத்தாண்டிவருவாயா 
பயணசீட்டு வாங்காமல் -செய்த பயணம் அது, 
தேவதைகளுடன் தேவதையாய் கண்ட 
முதல்திரை- தேவிதிரையரங்கம்"
நிராகரிக்கபட்ட இடத்தில், நிர்வாகியாகி என் வேலையை 
செம்மையாய் செய்தது.விடாமுயற்சியின் தேடலில் 
விடியலையலையெண்ணி காத்திருந்த  அந்தநாட்களே 
என்றும் பதியாத தழும்புகளாய் மனதில் பதிந்தது.


விதவையவளின் கைவண்ணத்தில் வண்ணக்கோலம்..!

வெள்ளை நிற புள்ளி ஒன்று, கம்பிகலில் சிக்கல்கோலமாய்  அடைக்கபட்டிருந்தது,

முதல்புள்ளையார் சுழி போல வண்ண ரங்கோலியாய் _விதவையவள் மாற்றமாய் 
மறுமணம்...

அனாதையின் ஏக்கம்!!

விலாசமில்லா மொட்டை கடிதாசிபோல துனையெழுத்தில்லா மழலை நான்

அனாதை ஆசரமங்கலில் பிறந்த நாள் கொண்டாட்டம்??

ஒரு நாளில் கிடைக்கும்
 இலவச உணவில் 
ஏக்கங்கள்ஆயிரம்

உணவிற்க்குபதில் 
தாய் தந்தையை தானம் செய்யுங்கலென்று

அறிவு..!

உடலால் மட்டும் உணர்கிறேன் 
-ஓரறிவு உயிர் நான்???
*புல்_ பூண்டு-மரம்*

உடலோடும்  நாக்கினால் உணர்கிறேன் 
ஈரறிவு உயிரும் நான் ???
*மீன் பாம்பு*

உடலோடும் நாக்கும் மூக்கினால் உணர்கிறேன் 
மூவறிவு உயிர் நான் ??
*எறும்பு கரையான்*

நாக்குமூக்கு கண்காதுகளினால் உணர்கிறேன் 
நன்கறிவு உயிரும் நான்??
*நண்டும் தும்பியும்* 

உடல் நாக்குமூக்கு கண்காதுகளினால் உணரமுடிகிறேன் 
ஐந்தறிவு உயிருமாய் நான்??
*விலங்குகளும் பறவைகளும்*

ஓரறிவு முதல் ஐந்தறிவோடு மூளையை உபயோகிப்பதால் 
ஆராமறிவு ஆகிறான் இவன்???
*மானிட மனுஷன்_மனுஷி*

ஹைக்கூ

முள்கள் குத்துமாம் 
உந்தன் முள்கள்- என்னை
சுறுசுறுப்பாகின்றன *கடிகாரம்*

வழிப்போக்கனான எண்ணை குத்தியும் 
என்னிலிருந்து உன்னை உடையாமல் 
வணங்கிஎடுக்கிறேன் *வேலிக்காத்தான் முள்*

சத்தமிடாமல் முத்தமிடுகிறது-*பேனாமுனை*
ஒவ்வொரு ஆயுத எழுத்திலும்..!!

பாடத்திட்டங்கள் வந்தபோது தேடாதநான் 
உன்னைத்தேடி திரிந்தேன் நாளைத் 
தேர்வு என்பதால் *புத்தகம்*

இயற்கை..!!


எழிலோவியமாய் கொட்டும் அருவிகள் 
பயிர்களின் தேன்துளிகளாய் மழைச்சாரல்கள்.
உருவமில்லாமல் உணரவைக்கும் காற்று 
ஏழைவீட்டின் அழையாவிருந்தாளியாய் 
எட்டிப்பார்க்கும் கதிரொளி
கிணற்றில் இரவுகுளியல்போடும் நிலா..!
 
மொட்டைபோடும் ஆசைவந்ததும் 
இலையுதிர்காலத்திலே மரங்களுக்கு 
ஓரறிவு பூச்ச்சுகளின்நிழற்குடமாய் 
காளான்களின் தோற்றம்? 
குக்கூ பறவையின் கூவல் 
கிக்கி கிளியின் மழலைப்பேச்சு 
அம்மாஎன்றழைக்கும் ஐந்தறிவு பசுக்கள் 
தவழும் குழந்தையை.
சீரும்பாம்புகள் அழிக்கநினைப்பவர்களை 
அலையவிடும் தேனீக்கள் 
பாட்டியிடம் திருடியும், விரதவுணவுகளை 
அன்போடுஅழைத்து கொடுக்கும் 
படையலும் காக்கைகளுக்கே..

சுட்டும் விழி சூடரே பாரதிவரிகள்

மீசையில்லா பாரதியாய், 
நடனத்தில் உருவம் கொடுத்த நங்கைஇவள்..

வரிகளின் ஆழத்தில் மூழ்கவைத்து எங்களை,

புத்தகத்தில் உறங்கிய பாரதியின் வரிகளை உயிர்பெற செய்தவ உன்குரல்கள். 

முண்டாசின் வரிகளும்
அம்மங்கையின் நடனஅசைவில் விளக்கங்களாய், உன் குரலினில் கோர்த்த பூமாலையாய் பாரதிவரிகளை உயிரோட்டம் முக்தியளித்தாய்...

சனி

காதலின் தேர்ச்சியாய் கல்யாணமேடை..!

தொடமுடியாத தொலைவுகளிலும் இருந்தும்-உன் காதல் 
காற்றாய் தொடர்ந்து வந்தது..!!
 
வருடங்கள் ஓடின,,,
வாழ்க்கையின் ஓட்டத்தில் 
இருந்தும்-வரும் வரண்களையெல்லாம் நிராகரித்து,

 உம்மை யென்னியே 13 வருடத்தினை  தவமாய் மனதில் உம்மை முடிந்திருந்தேன், 

நம் இருவரின் தேர்வுகளின் தேர்ச்சியாய் நாளை 
நம் திருமணம்

வெள்ளி

நாத்திகன் நம்பிக்கை வடிவமாய் கடவுள்

உன் நம்பிக்கைக்கு பெயர்வைத்துபார் அங்கே கடவுளை காணலாம்👍சிலையிலும் அல்ல ஆலயங்களிலும் அல்ல🤝உன் உள்ளே😍உனக்குளளே உருவமில்லாத ஒரு சக்தி ஆடிகொண்டிருக்கும், காணும் விதம்தான் வேறு, என்னில் காண்பதால் நான் நாத்திகன் ஆனேன். ?? உன்னில் கானததால் ஆத்திகவாதியாய் கோவில்களை தேடிசெல்கிறாய்

வியாழன்

ஒரரிவு முதல் ஆரறிவு..!

ஓரறிவு -புல்லாய்பிறந்து,

ஈரறிவு- நத்தையாய் தவழ்ந்து 

மூவறிவு -எறும்பாய் கடுன முழைத்து 

நான்கறிவு நண்டாயும், 
சிக்கனத்தில் சுமையைசுருக்கி 

தும்பியாய் சிறகமைத்து,

ஐந்தறிவு பசுவாயும்,பறவையாயும் 

பிறவி எடுத்து - திருப்தி அடையாமல் 

ஆறாம்அறிவாய் மனிதபிறவியில் முக்தியடைகிறது  வாழ்க்கை

பெற்றோர்..!

விவசாய விஞ்சானி 
சுமைகளிலும் பிள்ளைகளின் 
கனவுகளை தேடுபவர்.
கவலையில் மகளின் 
முதல் தேடல் அப்பா…!

தியாகத்தின் உருவம் நீயே 
உணவாயினும் உண்டியலாயினும் 
கடவுளின் பிராத்தனையாயினும் 
அனைத்திலும் பிள்ளைகளே 
உயிர்நாடி,
இதயம் துடிப்பதை போல 
உன்மனது எம்மைப்பற்றியே 
யோசனையில் துடிக்கும் 
அம்மா…!

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....