திங்கள்

இயற்க்கை மனமுடிப்பு


வரிகளின் ஆழத்தில் 
மூழ்கி மீளாயோசனையில் 
புத்தக நோட்டை
நான்நேசித்திருக்க ஒருபுறம் 


அடர்ந்த 
காற்று தூவி..!!

செம்பூக்கள் 
சிதறி..!!

என்னையும் 
என்புத்தக -ஏட்டையும்

இயற்க்கை 
மணம் முடித்தது...!!

வெள்ளி

மறந்து போன 
கனவெல்லாம் 
மறுபிறவி எடுத்து
என் வேண்டுதல்களையும் 
ஆசைகளையும் 
நிறைவேற்றுகின்றன..!!
தருணங்கள் 
தடைப்போடலாம்

தருணங்கள் 
தகராறும் செய்யலாம் 

எண்ணியவை எரிக்கபடலாம் 
என்னாத கனவையும் 
எட்டிபிடிக்கலாம் 

எந்தன் கனவுக்கும் கனவின் கனவிற்க்கும் வெற்றிகிட்டியாச்சு..!! 

சுயம்வரம்

ஏதோ ஒரு கனவாய்
எவர் என தெரியாமலே
சிறுபுன்னகை வந்துசென்றே 
போகிறது

எப்படி பட்ட ராட்சசனோ
குரலை உசத்துபவனோ
நாவை அடக்க கற்றுகொடுப்பவனோ
கடும் சோம்பேரியோ
சினம்கொண்டு சிடுசிடுவென பேசுபவனோ

மிகைப்படுத்த கூடியவனோ
மிகைப்படுத்த கூடாதவனோ
எவனோ ஒருவனின் 
கைகளில் பெண்களின் 
வாழ்வு ... 

புதன்

கடவுச்சொல் காதலி



எந்தன் கடவுச்சொல் 

பிழை இல்லா ஒரு வரி பிழயாய் 
என் மடலாகி போக...!!!

உம் சினத்தையும் 
வேதியியல் 
மாற்றம்செய்து
அன்பதிகாரமாக்க
தோன்றுகிறது..!!!

உன் சொந்தங்களின் 
பட்டியிலில் அணைத்து 
உறவாகவும்
நானே ஆகவேண்டும் ..!!!




வெள்ளி

நட்பு எனப்படுவது யாதெனில்

 நண்பிகளுக்கு துணை..!!
நட்பின் இலக்கணம் அறியாப்பருவத்தில் 
கிடைத்த சோனியாவின் முதல் நட்பு  ..!!
நடைபெயர்ந்து படித்த பள்ளி பருவத்தில்  
என்புத்தகங்களை சுமைதாங்கிய 
இலக்கியா அக்காவின் நட்ப்பு ..!!
மிதிவண்டியில் ஏற்றக்கூடாதென கண்டிக்கும் 
அப்பாவின் கைகளால் பிடுங்கப்பட்ட 
இருக்கைகளை அவர் கரங்களே எனக்காக 
போடவைத்த கலைசெல்வியின் நட்ப்பு..
விடுதியில் பயிலும் எனக்கு மாதந்தோறும் 
 கடிதத்தில் நலம் விசாரிக்கும் 
சத்யாவின் நட்ப்பு.
இளங்களையில் கிடைத்த சொத்துகள் என் வித்யாவும் லோகியம்  சரண்யாயின் நட்பு, உலகை முழுமையாய் சுற்றிய திருப்தி 
எத்திராஜ் கல்லூரியின் நீங்கா  நினைவுகள்..!! 
முதுகலையில் ஒரு தீ,, ஹாம் கடலோர கவிதை ரேகாவின் பாச போரட்ட அன்புத்தொல்லைகள், அழகிய பொசசிவ் காட்சிகள் ,
 தெய்வானை திவ்யாவின் அன்பு அரவைணைப்புகள்,
பேபி  என்றே அழைப்பாள், அவளோடு நான் சென்ற candle light dinner, தியாகராய நகரை திரிந்து திரிந்து தின்பவர்களும் பொம்மைப்பொருட்களை வாங்குபவர்கள் நாங்கள்.
பணியில்  கிடைத்த லோபாவின் நட்ப்பு மொழிதெரியாமல் 
மழலையாய் தொடங்கினோம் நட்ப்பில் தொடங்கி சகியானவள் 
சகோதரியானால்,,,
அழைப்பில் செல்லக்குட்டி, அன்பில் அன்னைதெரேசா - பாக்கியா 
வரிகளில் முடிந்துவிடாத தொடர்கதை பயனாளிகள் என்றும்  
என்வாழ்வின் ஒலிக்கட்டிகள் இவர்களில் பலர் 

 

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....