வியாழன்

மாறா..!

தஞ்சமடைந்த தந்தையின் 
காதலியை தேடியே 
சுவர்முழுதும் விடைதெறியா 
கிருக்கலாய் இவன் கிருக்க 

சிறு வயதில் சிறுமி கேட்ட மீராபாட்டியின் 
புதிர்கொண்ட கதைகள்,

புரியாத கேள்விக்கும் விடைகிடைத்தது,
அவன்கிறுக்கல் ஓவியத்தில் இவளுக்கான விடை 
தேட வைத்தது...

மூவரின் ஆசையை 
முழுமனதாய் நிறைவேற்றியவள்

எதையோ தேடி எதர்த்தமாய் 
இவளுக்கான துணையும்
முதியவர்களின் காதல்  இருமனங்களையும் இனைத்தது..

செவ்வாய்

விளம்பரமயம்!!


சுவரொட்டிகளிலும் 
தொலைக்காட்சிகளிலும் 
அறிவிப்பு-காகிதபேப்பரிலும் 
திசையெங்கும் 
விளம்பரங்களினால் ஏங்கும் 
குழந்தைகளின் ஏமாற்றமாய் 
விலையேற்றம்..


பறையடிகள் கழிந்தன, 
நடிகைகளும் புகுந்தன..!!

விற்பவனின் ஆனந்தம் 
வாங்குபவனின் பெருந்துன்பமாய் 
விலையேற்றம்..




வெள்ளி

ஜல்லிக்கட்டு.!


சீறும் இரு காளைகல் 
ஒரே களமிறங்கி 

தமிழனின்பன்பை 
வீரத்தால் வெளிகொனர்வது..!!

வலைதள பூக்கள்!!

என் வலைதள பக்கத்தில் 
நிறையப்பூக்கள் 
கவிதையாய் பூத்துருக்கு..!!! 
வாசகர்களையெண்ணி 
காத்துமிருக்கு...!!
உங்கள் பதிவிற்காக 
ஏங்கியுமிருக்கு 
வாசியுங்கள்..!!

வியாழன்

தை-பொங்கல் !!!



தித்திக்கும் சுவையோடு
தங்கமகளை எதிர்பார்க்கும்  
தைதிங்கள் பிறந்தநாள்..

பூக்கள் பூத்துகுலுங்கும் மாதமுமே.!
எட்டுத்திக்கும் பரவிகிடக்கும் 
பூசணிபூக்களை வாசல்கோலத்தில்
வண்ணமிட்டு ரசிப்பதும் தனிஅழகே..! 






பிடித்த கவிஞர் தபூஷன்கர்..
காதலை பிடிக்காதவன் கூட 
இவர்ப்புத்தகங்களை வாசிக்க நேர்ந்தால் 
கண்டிப்பாக ஒருதலை காதல்பிறக்கும் 
அழகைமட்டுமே ரசிக்கும் பலகவிஞ்சர்கள் 
மத்தியில்...
காதலியை  சுற்றியுள்ளய னைத்தையும் 
நேசிக்கத்தொடங்கியவன் 
புத்தகங்களின் தலைப்பும் 
எதார்த்தம் நிறைந்தது..!!
ஒருவரியில் மூன்றுவரத்தைக்கொண்டும் 
கவிதீட்டுபவன்...!!! 
அவை ஹைக்கூகளுமில்லை..


வெட்கம்,சிணுங்கள் எழுத்தில் உயிரோட்டமிட்டு 
பள்ளி கல்லூரியின் கிலோமீட்டர்கள் வரை,
செடிகள்-கொடிகள் மலர்களாய் மலரும் கவிதைகள் 
குட்டை,  குலங்கள் குளிப்பதுமாயொரு ரசனைகள் 
தெருக்கள்-கோலமாவு பெருமைகளை  
கோவில் ,தேர், கடவுள்சிலையென 
காதலியை நினைவில் நிறுத்துபவன் 
கண்ணின்-மை முதல் கால் கொலுசும் 
தன் காதலியை ரசிப்பதைபோலொரு உவமை.
இவன் பேனாவிலே கவிதீட்டுவதைப்போல 
அனைத்தும் இலக்கணத்தில் பிறக்காமல் 
எதார்த்தத்தில் பிறந்தவை..


தபு கவிதைக்கே 
காதலியை கவிதையாக்குபவன்.
முட்கள் மலராவது இவள் கூந்தலில் சூடவே 



 


செவ்வாய்

KD எனும் கருப்புதுரை..!


KD எனும் கருப்புதுரை!!!
மதிமங்கும் பருவத்தில் 
நான் கற்றது-மகிழ்ச்சியாய்
பத்திரத்தில் கையொப்பத்திற்க்கு
பதிலாக கையெழுத்திட்டது!!!

நன்பனோடு இருசக்கரவாகன 
உலாவந்தது..!!

சுமையாக நினைத்த குடும்பத்தில்இருந்து 
தப்பி உன்னிடம் தஞ்சமடைந்தது..!!

பொருலிருந்தும் பிள்ளையிருந்தும் 
அனாதயான நான்??
ஏதுமில்லா தருனத்தில் 
எஜமானிக்கினாய் சிறுவனே..!!!

வயதில் வலந்தவனைவிட 
குனத்தில் வலந்து 
என்னை வழிகாட்டிய 
*குட்டிமழலைதாயுமானவனே!!!





ஏற்றம் (ஏணி)

பாரபட்ச்சமில்லாமல் 
அனைவரையும் உயரே ஏர
துனையாய் நிர்க்கும் ஒர்-தூன்...!!

பெற்றோரின் 
ஊக்குவிப்பைக்காட்டிலும் 
தோழமையின் வார்த்தைகளே
வெற்றியின் முன் தள்ளுகின்றன..!!

வாழ்வெனும் சூதுவிளையாட்டும்
பரமபதம்போலவே...!!

ஏற்றத்தின் பாதையை சரியாக 
தேர்ந்தெடுத்தாலே போதும்
நம் லட்சிய இலக்கை அடையலாம்..

எந்த நஞ்சும் நம்மை தீண்டும் முன்..

குப்பைத்தொட்டி!

தூக்கிவீசும் குப்பைப்பொருள்கள் 
தூக்கி கொஞ்சும் பொம்மை
குழந்தையானதென்னவோ.!.!

இயற்கை பிள்ளையின் 
செயற்கை கொஞ்சல்
பிளாஸ்டிக் பொம்மை தொட்டி.!!!

இருப்பவன் குப்பைகளில்
வேண்டாமென எரிவதை,
இல்லாதவன் எடுக்கிறான்.. 

முதலாளிகுழந்தையின் அழுக்கான
பழைய பொம்மைகள்...
அழகாக ஜொலிக்கின்றன 
ஏழைக்குழந்தைகலின் முகத்தில்
மகிழ்ச்சியின் பிரதிபலிப்பாய்...

அழுக்குபடிந்த குப்பைகளும்
அழகு பெறுகிறது 
அன்பின் இல்லத்தில்...

என் அக்காவின் 
திறமைகளினால்
குப்பைகள் மருஜென்மமெடுக்கின்றன 
காட்சி பெட்டியெனும் அரையில்..

சமையலறை

உணவுகளின் பிறப்பிடம்
சமயலறை!!
செல்ல சண்டைகளும் 
பரக்கும் கரண்டிகளும்
பாசமூட்டும் ஸ்பூனாவது
சமையலறையில்..

அஞ்சறைபெட்டியே அம்மாவின் 
அவசர சேமிப்புவங்கியானது..!

மழலைகள் கரங்களினால்
தட்டுகளும் ஸ்பூனும் 
சமையலறையில் அழகிய 
இசைகூடமாயாவது..!

சுமைகளிலும் மகிழ்ச்சி பிறப்பது 
பாராட்டுகையில்..!!

சமையலறை சந்தோஷகலமாவதும் 
சங்கடகலமாவதும் கையாலும்
விதத்திலே..!!!

கூதிர்காலம்(குளிர்)

இறைவனின்சிலை
பனித்துளி நனைக்கையில் 
குளிர்காலமானதோ ???
பில்களில் குளிர்-போடும்  
 குளியல்-பனியின் ஷவற்-பாத்தோ ???
சிலந்திவலையும் மழைத்துளியால்  
மாளிகைக்கட்டும் ஆசைவந்ததும் 
மார்கழிமாதத்திலோ???
கதிரவனினை உதிக்கவிடாமல்  
உறங்கவிட்ட காலமது..!
குக்கூ குயிலிசையும் ஓய்வெடுத்த காலமது ..!
சேவல் கூவாமலும் மறந்தகாலமது 
அதிகாலை பீடையொழிய சங்கின்முழக்கமிட்ட 
குளிரின் மாதமும் மார்கழியிலே...!!!
காலநேரங்களை மறந்து போர்வை 
நொடிகளில் புகுந்தக்காலம்-குளிர்...!
உறக்கத்திலும் உறங்கும் குளிர்காலம்..

துவண்டதருனம்

எந்தன் தூண்டுகோல் ஆசானாய்.!
என்னை போதிக்கும் அன்னையாய்..!!
எந்தன் தந்தை பிம்பத்தின் நிழலுமானவனாய்...!!!
நான் துவண்டகணத்தில் தூ வள்பேனாவாய் நின்றாய்..!!
என்சிறுமுயற்சிக்கு நீ மெச்சிபுகழுகையில் 
என்கனவுகளும் துளிர்க்கிறது!!
உன்பிரிவில் நான்மகிழ்ச்சிக்கண்டேன் 
பாசத்தின்ஆழத்தினை அறிந்ததருணமது,!!

வாடியபோதும் தேடியபோதும் 
அன்புக்கவசம்கொண்டு 
அள்ளிஅனைத்துவிட்டிட்டாய்  
அலைபேசியிலே .!!

வியாழன்

பதியாத தழும்புகள்

பாரதியின் கவிகடலில் 
வீழ்ந்த என்காதல்போல...!

திருவள்ளுவரின் குறலின் 
பொருலறியா மழலையைப்போல..!

கல்விகண்திறந்து ,மூடநம்பிக்கையில் 
முற்றுபுள்ளியிட்டு, வாழ்வின் சிக்கனத்தையம் 
கற்றுகொடுத்த கர்மவீரர்போல..!

கரண்டிகல்  இருந்தகரங்களில் 
கல்விபுத்தகம் பரிசளித்தவர்..!!
சுயதொழில்/ தம்வயிற்றுகாயினும் 
உழைத்து தனித்து நிற்கவேண்டுமென பாடம்புகட்டியவர்..!!
சாதிசாக்கடை குப்பைகளை 
எழுத்தத்தின் மூலமே  அகற்றியவர்..!!
பகுத்தறிவுகலை கற்றுக்கொடுத்த எந்தன் ஆசான் பெரியர்..!

மொழியின் தீராத காதல் -தமிழோடு!!!
என்வாழ்வின் கற்ற பாடம் -
பதியாத தழும்புகலாய்...!!!
இவர்களின் வரிகளிலேயே!

புதன்

சிலந்திவலையும் முன்மாதிரியே

புள்ளியாய் ஒருலட்சியம்  

நூலிழையாய் என் கடினஉழைப்பு 

தொடா முயற்சியாய் என்பயணப்பணி 

விரைவில் சிலந்தி வளையைப்போல 

இலட்சிய இலக்கை அடைவேன்,

விழுந்தாலும் விடாமுயற்சியுடன்,

புழுக்கள் படடம்பூச்சிகளாய் 

உருவெடுத்தபோது -வானில் 

வண்ணத்துப்பூச்சியாய் 

சிறக்க துடிக்கிறேன்,



தன்னமிக்கை விருட்ச்சம்...!

 

எறியப்பட கற்கள் 
ஏணிப்படுக்கட்டுகளாக...!!!
வீசப்பட்டவிதைகள் விருட்ச்சமாய்
எழுவதைப்போல..!!!
குறைசொல்லலில் உளிகொண்டு
கல்கியாய்...!!!
நம்மை நாமே உளிக்கொண்டு 
தயார்படுத்திக்கொள்ளவேண்டும்...! 
ஓயாமல் உழைக்கும் *கடிகார முல்லைபோல* 
ஒவ்வொருநாளும் கிழிந்துபோகும் *நாளிதழைப்போல*
சின்னச்சிறு தன்னம்பிக்கையின் விதைக்கொண்டு,
தைரியமுயற்சியோடு பாதையை சரிசெய்யாதலே 
விருச்சமெனும் வெற்றியை பெற்றிடலாம்.

***கவிக்குயில் மதி***



துணைவி

துவண்டுபோன தருவாயில்
தோழனுக்கு வார்த்தையில் 
சக்தியிட்டு விருந்தளிப்பவளே,

தேடாமல் துளைத்த 
பாதைகளை 
பாசத்தால் பார்வையிட வைத்தவளே,

வேலையில்லா பட்டதாரியின் 
தேடலும் (வேலை)தொடங்கியது
துணையானவள் உன்னாலே!!!

#தோழியின்_துனை(/வி)

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....