செவ்வாய்


ஏழை பசியின்
உணவு -உழைப்பு
அன்று!

உயிர்கொல்லி
நஞ்சுகள்
அரசியல்வாதிகள்
அன்றும் இன்றும்

துயரம் துடைக்க
விளம்பரத்தோடு
காகித நோட்டுகலை
கிள்ளிக்கொடுக்கும்
அரசாங்கம்.

கண்ணீரிலே
கரைந்து
மெலிந்துபோன
உடல்கள்...

சாட்சியிருந்தும்
சாபமாய்
வாழ்வை அழிக்கமுடியாத
துயரமே மூன்று
மழலைகள்.

ஜெயராஜ் பெனிக்ஸ். 














ஒவ்வொரு
துளி ரத்தமும்
தெரிந்தவர் தெரியாதோர்
கண்களில்
குருதியோடையாய்
இன்றும்
வற்றாத தெப்பமாய்
நிற்கிறது ....



புதன்


இமைச்சொட்டு 















இருசொட்டு கண்ணீர்
மைகொண்டு
இருவரியே எழுத நினைப்பேன்!!

உள்ளமென்ற ஏட்டின்
காயங்களுக்கு-என் கண்ணீர்
எழுத்துக்கள்
மருந்தாகும் என்பதால்
மயிலிறகை போல
என்மனமென்ற எட்டினில்
கிறுக்கி கொண்டிருக்கிறேன்
நானின்று !!!!!!!!!!!!





நிலையில்லா அண்டம்
நிஜமில்லா புரளி
உடன் வராத நிழல்
உறவுகளின் நஞ்சு

நிரந்தரமில்லா வேலை
வட்டி முதல்
குட்டி வரை கடன்கள்
சுமைகளே வாழ்க்கை
சுமையாய்
நிம்மதி இல்லா மனது
எதை கண்டு
அஞ்சபோகிறது?

எப்பொழுதும் அழுத்துகொன்டே
இருக்கும் உள்ளம்.
ஆறுதலுக்கு ஆளில்லாமல் போய்
எனக்காகவும் அழுகிறதே.

எதிர்பார்ப்பு ஆ சையேதுமின்றி
தனிமையே மேற்கொள்ள வேண்டி
எண்ணத்தோன்றுகிறது மனது...







திங்கள்


ஆனந்த (அழுகை )கண்ணீர் 













ஆனந்த கண்ணீரை
அனைவருக்கும்
அளிக்கிறேன்

என்வலிகளின்
கண்ணீரை
எவரும்
அறியாதவாறு......

சுமைதாங்கியானவள் !!!










சுமைகளை சுமப்பதனால்
என்னவோ 
நானே
சுமையாகிப்போகிறேன்
இப்போதெல்லாம்,,,,,


அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....