வானம் விரித்த சிறகு !!!
நினைப்பை எல்லாம்
காட்சியாய்,,
என் இமைகளின்
சொர்கலோகமாய்,,
என் சின்னசிறு
கற்பனை ஆசை
கனவுகளோடு
உன்னையே உற்றுநோக்கும்
எந்தன் கண்கள்..
மதிக்கும் கதிரவனுக்கும்
அடைக்கல அன்னையாய்
வானம்....
பிரிவுகளை உணரவைக்க
பிரிந்து சென்று
அதிகாலை காக்கை
கோழிகூட்டதோடு
துயில் எழுப்பும்
கதிரவன்,
கதிரவனின் கடும்வெயிலை
தன் சாந்தத்தோடு
குளிரின் நிலவாய்
ஜொலிக்கும் நிலவு...
பணிவேலை முடிந்து
வாசலில் நாற்காலியிலமர்ந்து
உன்னை ரசிக்கவரும்
இல்லத்தரசிகளுக்கு பிள்ளைகளுக்கும்
தொடுவானிலிருந்து நீலசோறு
ஊட்டுகிறாயே நிலா தாயே !!!
நாட்கள் புரண்டு
பகல் நிலவாய் சிலநாள்
மூன்றாம் பிறைநிலவாய் சிலநாள்,
இயற்க்கை எழிலோவிய
பிறை அழகே !!!
உன்னை தரிசிக்கவே
மின் மினி பூச்சு பட்டாரம்
பூமியில் இருந்து பறந்து
வானில் தஞ்சமடைகின்றன
இவைகளின் புது அவதாரமோ
"நட்ச்சத்திர கூட்டமாய் "
என்வாழ்வின் நீலம்
எவை என்பதை
ஒருமுறைஅண்ணார்ந்து
பார்க்கையில்உணர்கிறே ன்
இன்னும் எவ்வளவு
சிறக்க வேண்டும் என்பதை.
என்கனவுக்கும் ஆசைக்கும்
எல்லையில்லை என்பதை
சுட்டி காட்டவே
விரிந்தது போல
இவ்வானம் ......
சிறகு இல்லையென்றாலும்
சிறப்பேன்
லட்சியத்தில்
இவ்வானம் வரை......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக