வெள்ளி

உழவனின் புதிய பாதை,,,


விதை இவன் விவசாயி 

இறைவனிடம் வரம் வாங்கி 
இயற்கையிடம்தோற்று,,
மனம்  தளரா மனதோடு 
மீண்டெழுந்து..!!

பெற்றதை பெற்றவரிடம் திருப்பிக்கொடுப்பதற்குள் 
அவர்கள் பேச்சுகளில் 
இவன் மூச்சி நிற்கிறது..,///
அப்பப்பா அடடா..!! 
அறுவடையிட்டும் குன்றிப்போகிறதே 
இயற்கை சீற்றங்களால் 
பயிறும் வயிறும் வயதும்..!!

முற்றுப்புள்ளியிடாமல் போராடுகிறான்..!!

அவன் வேர்வையில் எரியும் 
தீப ஒலியில்தான் 
இன்றும் இறைவனுக்கே 
தீபாராதனை 
காட்டப்படுகிறது..!!!

இயற்கை முற்றுஇட்டாலும்  
இறைவன் முற்றிடடாலும் 
இவனின் பயணம்  
நம்பிக்கையில் விளைந்த 
விதையிவன் (விதை இவன் விவசாயி)


திங்கள்

தூவல் ரசிகை_எந்தன் தூவலன்!!

என்விரல்களின்தோழனிவன்
எந்தன் தூவலன்..!!

இறைவன் துணையே
 தூவலின் துணைகொன்டுதான்
பிறக்கிறது எழுத்துகளாய்.

என்கவிகள் ஏட்டினில் 
அரங்கேற காகிதங்களில்
யுத்தம்செய்து -குப்பைகளில் 
வீசியெறிந்தவன் 
இலக்கணப்பிழைகளால்..!!

அவன்தொப்பியால்
என்விரல்களை 
கவசமாக்கினான்..!!!

என் இரவுகளின்
இனியதோழநிவன் 
பாராட்டின் சொந்தக்காரன் 
கையடக்கத்திருக்கும் 
பிடித்தஆசைக்காரன்.
எண்ணங்களின் 
மனசாட்சியானவன்..!!

மழலை முதல்
மதிமங்கும்வரை 
உடனிருப்பவன்.
ஒருமுனை(பேனாமுனை) 
புரட்சியாய் 
ஐவிரலோடு -அனைத்தையும் 
ஆட்கொள்கிறாயடா!!!

கூலீயின் கூற்று


கல் உடைத்தும் நிரம்பாத வயிறு 
வீதியோரம் பாடியும் கிடைக்காத வாய்ப்பு
சுமை தூக்கியும் இறங்காத பாரம் 
படித்தும் கிடைக்காத பணிகள் 

ஒருமாத சேவையை ஒருவருடத்திருக்கு பிறகு 
கிடைக்க போகும் லாபத்திற்காக 
முன்பணத்தோடு நட்டத்தை எதிர்நோக்கி 
கடன்களையும் சுகமாய் பெரும் -விவசாயி 


ஒரு ரூபாய் அதிகம்கிடைக்குமென 
சுமக்கும் சுமைகள் உடைந்தது -
மனதோடு எலும்புகளும் 
மருத்துவமனை படுக்கையில் நீங்கள் 

சுயதொழில் முதலீட்டில் இருந்து 
முதல் கிடைத்த முன்பணமாய் 
கடன்கள்..





உன் இரக்கத்தில் மட்டும் பிறப்பதில்லை மனிதநேயம்


இயற்கையின் முதற் படைப்பே மனிதன்
சிட்டுக் குருவியில் துவங்கி செல்லப் பிராணிகள் வரை 
அதன் இனத்திலிருந்து பிரித்து கூண்டில் அடைக்கின்றோம் 
இதுமனிதன் காட்டும்நேயமென கர்ஜிக்கின்றோம்!
 அன்பனைத்தையும் அள்ளித் தந்தவளை,
அனாதை இல்லத்திற்கு தாரை வார்க்கின்றான்
சுமை தாங்கும் பூமா தேவியை,
வேதிப்பொருள் நாடி துளையிடுகின்றான்.
பிறக்காத பிள்ளைக்கு ஏங்கும் தாய்க்கு 
அன்பளிபாய் அழைச்சொல் மலடி
சிப்பிக்குள் முத்தாக,
சிற்பியின்-சிந்தனைக்கேற்ற சிலையாக 
எவ்வுயிரிடத்தும் குறைவில்லா-அன்பை 
நிறைமனதுடன் காட்டுவதன்றோ 
மனித நேயம்!!!!


மனித நேயம்!!!!

அன்பனைத்தையும் அள்ளித்தந்தவளை,
அனாதை இல்லத்திற்கு 
*தாரை வார்க்கின்றான்*

சுமை தாங்கும் பூமா தேவியை,
*வேதிப்பொருள் நாடிதுளையிடுகின்றான்*.

பிறக்காத பிள்ளைக்கு ஏங்கும் தாய்க்கு 
அன்பளிபாய் 
*அழைச்சொல் மலடி*

சிப்பிக்குள் முத்தாக,
சிற்பியின்-சிந்தனைக்கேற்ற 
சிலையாக 
எவ்வுயிரிடத்தும்
குறைவில்லா-அன்பை 
நிறைமனதுடன் காட்டுவதன்றோ 
மனித நேயம்!!!! 

தோழமை


எந்தன் தூண்டுகோல் ஆசானாய்.!
என்னை போதிக்கும் அன்னையாய்..!!
எந்தன் தந்தை பிம்பத்தின் நிழலுமானவனாய்...!!!
நான் துவண்டகணத்தில் தூ வள்பேனாவாய் நின்றாய்..!!
என்சிறுமுயற்சிக்கு நீ மெச்சிபுகழுகையில் 
என்கனவுகளும் துளிர்க்கிறது!!

உன்பிரிவில் நான்மகிழ்ச்சிக்கண்டேன் 
பாசத்தின்ஆழத்தினை அறிந்ததருணமது,!!

வாடியபோதும் தேடியபோதும் 
அன்புக்கவசம்கொண்டு 
அள்ளிஅனைத்துவிட்டிட்டாய்  
அலைபேசியிலே .!!




சிந்தனை தீ

 
இயற்கை..!!

எழிலோவியமாய் கொட்டும் அருவிகள் 
பயிர்களின் தேன்துளிகளாய் மழைச்சாரல்கள்.
உருவமில்லாமல் உணரவைக்கும் காற்று 
ஏழைவீட்டின் அழையாவிருந்தாளியாய் 
எட்டிப்பார்க்கும் கதிரொளி
கிணற்றில் இரவுகுளியல்போடும் நிலா..!
 
மொட்டைபோடும் ஆசைவந்ததும் 
இலையுதிர்காலத்திலே மரங்களுக்கு 
ஓரறிவு பூச்ச்சுகளின்நிழற்குடமாய் 
காளான்களின் தோற்றம்? 
குக்கூ பறவையின் கூவல் 
கிக்கி கிளியின் மழலைப்பேச்சு 
அம்மாஎன்றழைக்கும் ஐந்தறிவு பசுக்கள் 
தவழும் குழந்தையை.
சீரும்பாம்புகள் அழிக்கநினைப்பவர்களை 
அலையவிடும் தேனீக்கள் 
பாட்டியிடம் திருடியும், விரதவுணவுகளை 
அன்போடுஅழைத்து கொடுக்கும் 
படையலும் காக்கைகளுக்கே..

உடலால் மட்டும் உணர்கிறேன் 
-ஓரறிவு உயிர் நான்???

*புல்_ பூண்டு-மரம்*

உடலோடும்  நாக்கினால் உணர்கிறேன் 
ஈரறிவு உயிரும்நான் ???

*மீன் பாம்பு*

உடலோடும் நாக்கும் மூக்கினால் உணர்கிறேன் 
மூவறிவு உயிர்நான் ??
*எறும்பு கரையான்*

நாக்குமூக்கு கண்காதுகளினால் உணர்கிறேன் 
நன்கறிவு உயிரும்நான்??
*நண்டும் தும்பியும்* 

உடல் நாக்குமூக்கு கண்காதுகளினால் உணரமுடிகிறேன் 
ஐந்தறிவு உயிருமாய் நான்??
*விலங்குகளும் பறவைகளும்*

ஓரறி முதல் ஐந்தறிவோடு முலையை உபயோகிப்பதால் 
ஆராமரிவு ஆகிறான் இவன்???
*மானிட மனுஷன்_மனுஷி*


ஞாயிறு

குரல்

அன்னைத் தமிழின்
அற்புதக் குரல்!
அன்பைத் தெளிக்கும்
அழகின் குரல்!

ஆணவம் இல்லா
ஆனந்தக் குரல்!
ஆர்வம் இருக்கும்
ஆசைக் குரல்!

இன்பம் இணைந்த
இனிமைக் குரல்!
இளமை சொல்லும்
இசையின் குரல்!

ஈர்ப்பாய் இருக்கும்
ஈசன் குரல்!
ஈடிணை இல்லா
ஈகைக் குரல்!

உண்மை பேசும்
உதட்டின் குரல்!
உறவாய் ஆக்கும்
உணர்வின் குரல்!

ஊமையும் கூட
ஊகிக்கும் குரல்!
ஊரார் நெஞ்சில்
ஊரும் குரல்!

எண்ணம் மறவா
எளிய குரல்!
என்றும் இனிக்கும்
எளிமை குரல்!

ஏழ்மை இல்லா
ஏழைக் குரல்!
ஏளனம் இல்லா
ஏட்டின் குரல்!

ஐநிலம் போற்றிடும்
ஐஸ்வர்ய குரல்!
ஐங்குறு நூற்றின்
ஐயன் குரல்!

ஒழுக்கம் என்றும்
ஒழுகும் குரல்!
ஒவ்வொரு சொல்லும்
ஒப்பனைக் குரல்!

ஓடைகள் ஓடும்
ஓசைக் குரல்!
ஓலையில் எழுதும்
ஓவியக் குரல்!

ஔவியம் இல்லா
ஔடதக் குரல்!
ஔடனம் ருசிக்கும்
ஔவையின் குரல்!

சந்தக் குரல்! அது
எந்தக் குரல்! மாலதி
சொந்தக் குரல்! தமிழே
தந்தக் குரல்!

-முகம் தெரியா அண்ணாவின் கவிதை எனக்காக..!

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....