திங்கள்


முற்றுபுள்ளியில் சிறக்கும் ஆசைகள் 

தோன்றலின் எண்ணம் திரை-எதற்கு??
வானுக்கும் ஆழிக்கும் எல்லை-எதற்கு??

வாலிபத்தை தொலைத்துபின் தேடுவது-எதற்கு??
காலாவதி ஆனபின் காலத்தை தேடுவது-எதற்கு?

ஆசை அடக்கியப்பின் ஏக்கம்-எதற்கு??
தகுதி இருக்குமாயின் தயக்கம்-எதற்கு??

மீளா கனவுகள் தடை-எதற்கு??
வையகத்தில் வெற்றிடம் பல-அதில் 
தடம் படிக்க அச்சம்-எதற்கு..????

நீ முற்றும் இடத்தில் தொடரும் சிறகுகள்..!!!
ஆசைக்கு வேலி எதற்கு...!!!

- மாலதி ராமதாஸ்

கவிக்குயில் மதி எனும் புனைபெயரில் கவியெழுதி வருமிவர் முண்டாசு கவிதையில் வீழ்ந்து, மீசையில்லாகண்ணம்மாவாய் கவித்திட்டுபவள்.. 


செவ்வாய்

அ முதல் ஃ வரை உயிரோடு மெய்கலந்தவள் சகோசகி

அன்பிலொரு அன்னை
தியாகத்திலொரு தந்தை 
பழமொழிமுதல் பஞ்சாங்கம் வரை 
அறிவுரை சொல்வதில் பாட்டி.
ஆசையாய் கொஞ்சலில் அக்கா
அன்பாய் கண்டிபதிலொரு அண்ணன்
அக்கரை காட்டுகையில் தங்கை.
ஆசைபொருளை  தியாகம் செய்வதில் கொடைவள்ளி.
காய்ச்சலின் கவனிப்பில் மருத்துவர்.
வீட்டுபாடம் சொல்லிகொடுக்கையில் ஆசிரியை.
ரகசியங்களை சொல்லுகையில் சகி(தோழி)
ஆயிரம் சொந்தங்கள்  இருந்தாலும் 
தம்பி தங்கைகளை பாதுகாப்பதில் என்றும் 
இரண்டாம் தாயுமானவள் 
வரம் தந்த தேவதைகள் அல்ல இவர்கள் 
வரமே வரம் வாங்க  தவம் கெடக்கும் 

என்றும்  தேவதைகளாய்  -என் அக்காக்கள்

கவிதையை நேசிக்கும் நேசகி 
எண்ணங்களில் உதித்தவை யாவும் 
கவிதையென எண்ணுபவன் 
என்றும் கவிஞ்சனின் ரசிகை 

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....