வியாழன்

தூவல்(பேனா)ரசிகை

எழுத்தானியானவனே
காதலனை விட
உந்தன்கரங்கலையே
இருக்கி அனைத்து 
அழகியகாதலை
அரங்கேற்றுகிறேன்
உன்கரம் பிடிக்கையிலே
எந்தன் இதயம் 
பல்வேறு துடிப்பினை
அழகிய நினைவாய் பதிவிடுகிறது 
உன்னிடத்தில்.
உன்னை எந்தன் நிழலாய்
ஓடி ஓடி வந்து 
ஒவ்வொரு நொடியின் 
இதயதுடிப்பை துள்ளியமாக 
பதிவிடுகிறது
இதுவறை எந்தன்
இதயதுடிப்பு அவனுக்கென்று
நினைத்தேன்
உன்னை பிடிப்பதில் 
என் எண்ணங்கள் ஊற்றெடுக்கின்றன 

இமைகளில் தொடங்கி இதயம் வரை!



அவன் கண்களிலிருந்து
ஊடுருவிய 
காதல்
வாசமாய்
என் சுவாசம்தொட்டு
என் தொண்டைகளில்
நடனமாடி 
பயணிக்கிறது 
எந்தன் 
இதயம் நோக்கி
லப் டப் லப்டப் என்று!

செவ்வாய்

கட்டைவிரல் காதலே!!!



உன்னை முத்தமிடாமல் 

தூங்க 

மறுக்கிறது 

என் கட்டை விறல் 

காதலியே!!!


என்னவெனின் 

கட்டைவிரல்!!! 


கவி பொய்யுரைக்குமாயின்🔥

 


கன்னகியின் கர்ப்பிர்க்கு 

தழல்எரித்தால் அன்று 

இன்று உன்சந்தேகத்திற்கு  

எதை எரிக்கட்டும்🔥

எரித்துவிட்டேன் 

தட்டச்சுகலை 

உன்னை 

பொய்யுரைக்குமாயின்🔥

எழுத்துக்கள்-நானாக பொருள் நீயாக


எழுத்துக்கள் 

மட்டும் நான் 

அர்த்தம் 

என்றும் நீயே




கவிகள் பிறப்பெடுக்கிறது உன்னிடம்!

 



சுமாரான 

கவிதைகலையே 

நான் எழுதுகிறேன். 

உன்னிடம் மட்டுமே 

கவிதைகள் 

பிறப்பெடுக்கிறது

இருவிழியும் ஒரு இதயமும் !!!



இமைமூடி 

இமைதிறந்து 

இந்த கிருக்கியை 

கவிபாட அழைக்கிறாய். 

இமையிலும் 

இருவிழியிலும்

இமைத்துகொண்டிருப்பது 

நீயும் 

துடித்துகொண்டே 

எழுத துடிக்கும் 

நம் இதயமும்!!

நீ கிறுக்கிய கவி!!!


கனவில்கூட சொல்ல 

 மறந்தவயைய் 

கவிதையில் 

சொல்வாயென்று 

அறியாமல் 

இருந்தேனடா....

கவிழ்ந்தேன் உன்னாலே

கவிதைக்கு கவி சேர்க்கும் முயர்ச்சியில் உன் தூக்கம் கவிழ்ந்ததேனோ!

ரோஜாவும் உன் நினைவும்

உன்னோடு 
பேசாத இரவுகள்
என்கனவில் வரமறந்து 
நீ உறங்கிய நாட்களில் 
நான்புலம்புவதெல்லாம் 
நீ வாங்கி கொடுத்த 
காதல் ரோஜா 
மலர்செடியுடனே
கொட்டி தீர்க்கிறேன்..

மழை மதி

இனிப்பிற்கு
ஈடில்லா சுவை,
தேனீக்களின் 
இல்லம் என்று
நினைத்தேன்

மழையின்
சுவையை 
புசிக்காதவரை



மழலை


ஆசைக்கு 
அடம்பிடிக்கவும்,
உணவூட்டுகையில் 
உரங்கியதை போல 
ஏமாற்றவும்,
அனைத்தும் 
கற்றுக் கொடுப்பவலுக்கு 
கன்னாமூச்சி விளையாட அழைப்பதும்
மழலைக்கு மட்டுமே தெரிந்தது..

ஆலோசக தோழர்


தோழமை 
கனவு 
எதிர்பார்ப்பு
ஏமாற்றம்
உணவு
உறக்கம் 
பசி 
இவையனைத்தும் 
வன்முறையால் 
சிறைப் பிடிக்கிறது.

காதல் இல்லா
இலக்கணம்
ஆலோசகராய்... 

கல்வன்!

 

எத்தனை வருடம் 
கனவில் கூட 
வராமல் போனாய் 

இன்று மட்டும் எப்படி 
வந்தாய் 
அழைக்காமலே... 

கிருக்கியிவள் அவனிடத்தில்



நடப்பவை அனைத்தயும் 
உன்னோடும்
உன் நினைவோடும் 
மட்டுமே 
ஒப்பிட்டு பார்க்க 
தோன்றுகிறது,
இந்த கிறுக்கிக்கி

இனியன்

இசையின் 
இரவில் 
இரவலாய் 
இவனின் 
இசையமைப்பில்
இமைகள் 
இமைக்கா நொடிகலாய்
இணைக்கிறது
ஒவ்வொரு ஞாபகத்திலும்.

நிற்கும் ....வினாக்களின்... மாப்பிள்ளையிடம்

கோப்பையோடு 
வந்து நிர்க்கும்போதெல்லாம்
என் வினாக்கலின்
பதில்களை 
உன்னைபோலே
சொல்லவேண்டும்
என ஏங்குகிறது
ஒவ்வொருமுறையும்
வரன்கேட்டு வரும் 
மாப்பில்லையிடம்

ஞாயிறு

எந்தன் காதல் வயது???


என்கவிதோன்றிய-நாளே 

எந்தன்-காதல்

பிறந்தநாள் என்பேன்..


2017 ஜூலை மாதம் 

கவிக்குயில் எனும் 

அழகிய குழந்தை 

பிறந்தது (ப்ளாக்கராய்)

4 வயதை கடக்கிறது....




நம் காதலின் நிறம் என்னவோ !!!


ரெட் பிலட் ரெயினின் நிறமதுவே 








சொட்டு சொட்டாய் 

விழும் மழையோடு 

சேர்ந்து விழுகிறேன்

நானும் உன்னிடத்தில்...


மழையின் ஒலியில் 

நம் சங்கீத் இசைக்க 


எந்த மதம்  

என்போருக்கு 

காதல் மதம் என்போம் 


நம் ரத்த பந்தமாய் 

மழையையே 

நம் சொந்தமாக்குவோம்!!!


மழையில் 

வெளிவராதோர் 

வெய்யிலும் 

நம் பங்காளியாக்குவோம் 


வெள்ளைமழை காதலே 

ரத்தசொந்தமாய் 

சிவப்புமழையை 

பொழியச்செய்வோம் 


ரெட் பிலட் ரெயினின் நிறமதுவே 

எந்தன் காதல் நிறம்...






காத்திருப்பு கவிமடல்!!

பார்க்காமலே காதல் கொள்வேன்

நீ ஒரு கவிஞன் எனில்,,,,

பேசாமலே ரசிப்பேன்

நீ ஒரு ஊமை எனில் ,,,

உன்வரிகளாக நான் மாறுவேன்

நீ பாடுகையில் ,,,,

என் கவிகளுக்கு காவியதலைவன்

முதலும் முற்றும் நீ ,,,,,

என்னை  செதுக்கும் 

எந்தன் சிற்பியே 

என் அருகில் வந்து

அன்புகாதல் 

மாரியை செலுத்து!!!


கடிதங்களும் 

கவிதை வாக்கியங்களுடன்

சேர்ந்து நானும் உனக்காக



மழையானவனே!!

 












குடையோடு வருகிறாய்
உரிமையில் 
மழைச்சாரலாய் 
விழுகிறாய்  
என்மனதில்...


மழையானவனே!!

 

குடையோடு வருகிறாய்

உரிமையில் 

மழைச்சாரலாய் 

விழுகிராய் 

என்மனதில்...

வெள்ளி

தோழியின் தேடல்!!

 



தேடல் இல்லா 

தோழிகளுக்கு 

தேவையைக்கூறி 

பயணத்தோடு -பாதையை-

அமைத்துதருகிறேன் !!!


என் தேடல்-தேவைகலை 

மறந்த படி


அவள் லட்சியத்தில் 

நானும் பூரிப்புகொள்கிரேன்/.....

புதன்


மாரி மாரி பொழியும் மாரி எனும் மழையே!!!





தினம் தினம் 

உன்னோடு ஒரு போராட்டமே 

வரவேண்டும் என 

வேண்டுகையில்,,,

வரமறுகிறாய்.


வேண்டாம் என்று 

வேண்டுகையில்-வந்து 

எம் 6மாத உ ழைப்பைப்

தும்சம் செயகிறாய் 

ஒரு அரைமணி நேரத்தில் !!!








மறிவேண்டுமென்று

பிச்சைவரை 

என் உரோர் 

உன்னை வரவேற்க 

காத்ததுண்டு!!!





பிம்பமே எந்தன் அலுவலக நண்பர்!!!









எந்தன் மன அழுத்தத்தையும் 

கோபங்களையம் 

கையாள தெரிந்த ஒரே நபர் 

எந்தன் அலுவலக  பிம்பம்...


அழுகையோடு ஆரம்பிக்கும் 

என் உரையாடலை 

சாந்தப்படுத்தி,

சாந்தமாய்,

வழியனுப்பிவைக்கிறது 

ஒவ்வொருமுறையும்.


 

வீட்டிலிருந்து வேலை 







ஓடி ஓடி தேய்ந்த -

கால்களுக்கு 

ஓய்வு வந்தது

ஊரடங்கு-பெயர்கொண்டு 


ஓயாமல் ஓடும்

என்போராட்டத்திற்கு 

வேலைபளு 

மட்டுமே மிஞ்சியது...







 



அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....