திங்கள்

இயற்கை..!!


எழிலோவியமாய் கொட்டும் அருவிகள் 
பயிர்களின் தேன்துளிகளாய் மழைச்சாரல்கள்.
உருவமில்லாமல் உணரவைக்கும் காற்று 
ஏழைவீட்டின் அழையாவிருந்தாளியாய் 
எட்டிப்பார்க்கும் கதிரொளி
கிணற்றில் இரவுகுளியல்போடும் நிலா..!
 
மொட்டைபோடும் ஆசைவந்ததும் 
இலையுதிர்காலத்திலே மரங்களுக்கு 
ஓரறிவு பூச்ச்சுகளின்நிழற்குடமாய் 
காளான்களின் தோற்றம்? 
குக்கூ பறவையின் கூவல் 
கிக்கி கிளியின் மழலைப்பேச்சு 
அம்மாஎன்றழைக்கும் ஐந்தறிவு பசுக்கள் 
தவழும் குழந்தையை.
சீரும்பாம்புகள் அழிக்கநினைப்பவர்களை 
அலையவிடும் தேனீக்கள் 
பாட்டியிடம் திருடியும், விரதவுணவுகளை 
அன்போடுஅழைத்து கொடுக்கும் 
படையலும் காக்கைகளுக்கே..

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....