சனி

பாரதியார் 



தமிழினை ரசிக்க வைத்தவன் 
குழந்தைகளை அவர் போக்கிலே
சென்று ஒழுக்கத்தினை கற்பித்தவண்
மகளிரை தெய்வாமாய் பார்த்தவன் 
ஆயிரம் அன்புபெயர் வைத்து
அழைத்தாலும் மகளிரை கவிநயமுடன்
தமிழ்நயம் கொண்டு கண்ணம்மா 
என்று அழைக்கையிலே மகளிர் 
அனைவரும் புதுமை பெண்ணாய் 
மறுபிறவி கொண்டனர் புதுநாமத்தினால்  
பெண்களின் மனதை காதல் கொண்டவன் 
கவியால் பாரதி ,,,

சாதி மதம் பார்க்கும் தன்  மனைவியிடம் 
இருந்தும் மற்ற மதத்தினவர்களுக்காக 
பாடல் வரிகளை தன்  கைகளால் எழுதியவன் 

வள்ளுவனும் சொன்னான்
இரு வரிகளில் திருக்குறளை 
பாரதியும் சொல்கிறான் 
பல வரிகளில் வழக்கை பாடத்தை 
சொல்லுதற்குரிய சொல்லியவண்ண
கவிநயத்துடன் அனைவரின் 
ஆர்வத்திற்கு எட்டாற்போல,,

உள்ளங்களிலே அழுகை கண்டவன் 
ஓய்வின்றி உழைத்து ஓய்ந்து போனான் 

பாசத்தினை அளித்தான் 
விலங்குகளிடமும் 
தினசரியும் தான் உண்ணவிருந்த 
வாழையை யானைக்கு அளித்து 
விரதங்களை மேற்கொண்டான் 
மதம் கொண்ட யானை 
நன்றி விசுவாசம் இன்றி 
பாரதியை மிதித்து உயிரை பறித்தது 

சிறுவயதில் இருந்தும் 
பல உள்ளங்களில் இன்றும் உயிருடன் 
வாழ்ந்து வருகிறாய் 
உன்கவிகளை வாசிக்கையில் 
மறுபிறவி கொண்டாய் 
அணைத்து மகளிரும் 
முதல் காதலனாக 
உன்னை நினைக்கையில் ... 

மொழிகளையும் ரசிக்கிறான் 
தமிழை  காவியம் ஆக்கியதால் 

உன் இருவிழி கண்கள் 
முறுக்கு மீசை 
அழகான உதடுகள் 
ரசனை நிறைந்த 
மூளை 
அவற்றை அழகை வெளிப்படுத்தும் 
உந்தன் கைகள் 
பேனாமுனை பிடி அழகு  
அடடா இவை அல்லவ்வா 
என்னவன் பாரதி,,,,,








கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....