அன்புள்ளம் கொண்ட அப்பாவிற்கு,,
சிறுபிள்ளை முதல்
மகளை தாய் என கருத்துபவரே
மகளிடம் நெருங்கி பழகி
ஆரிரோ தாலாட்டு தொடங்கி
அன்பை முத்தம், உறக்கநேரங்களில்
சிறு கதைகளையும் கூறி
கொஞ்சல் செய்பவரே சிறுவயதில்,,,
கால மாற்றங்களால்
உம்மை விட்டு தள்ளி நடக்கவும்
கற்று தருகிறாய்
என்னை பற்றி விசாரணை
தாயிடம் கேட்கிறாய்
கொஞ்சலும் தாலாட்டும்
தரமறந்து பிள்ளையின் நலனை,,
கருவிலே சுமக்கும் தாயுக்கும் நிகராக
இரு உயிரை வாழ்நாள் முழுவதும்
உம்மில் சுமப்பவரே
வாழ்நாள் முழுவதும் உறக்கமில்லாமால்
ஓடி ஓடி தேய்ந்தும் தேயாமல்
மனைவிக்கும் பிள்ளைக்கும் அமிர்த
உணவளித்து கால் வயிறு கூட
நிறையாமல் உழைப்பவரே,,,
பிடிக்காததையும் பிடித்தவாறு கொடுப்பவரே
60 வயதானாலும் ஓய்வின்றி உழைத்து
எவை கேட்டாலும் அளிப்பவரே அன்பாய்
மாயை உலகையை வேண்டுமென்றாலும்
வாங்கித்தரவிருக்கும் பாச தந்தையே
எப்படி சொல்வேன் எண் நன்றியை,,,
ஆயிரம் கேள்விகள் கேட்டாலும்
சலிப்பின்றி பதிலளிப்பாயே !!!
திறமைகளை பலர் பாராட்டுகையிலே
அறிகிறேன் இவையனைத்தும் அன்று
நீர் சீராட்டி ஊட்டியவை என்று,,,
உன்னை போல நல்ல தோழன்
இப்வுபூலகில் எங்கும் இல்லை
நான் உன்னை தந்தையை பெற்றதால்,,,
மகள் கேட்டதை அனைத்தையும்
பெறுகையில் அவள் மகிழ்ச்சிப்போல
தருகையிலே உன் சந்தோசம் !!!
சத்தியமாய் சாத்தியம் இல்லை
அப்பா உன்னை புரிந்து கொள்ள !!!
இனிய தந்தையர் தின
நல்வாழ்த்துக்கள் அப்பா!!!

1 கருத்து:
Good one... Continue your work....
கருத்துரையிடுக