அன்பனைத்தையும் அள்ளித்தந்தவளை,
அனாதை இல்லத்திற்கு
*தாரை வார்க்கின்றான்*
சுமை தாங்கும் பூமா தேவியை,
*வேதிப்பொருள் நாடிதுளையிடுகின்றான்*.
பிறக்காத பிள்ளைக்கு ஏங்கும் தாய்க்கு
அன்பளிபாய்
*அழைச்சொல் மலடி*
சிப்பிக்குள் முத்தாக,
சிற்பியின்-சிந்தனைக்கேற்ற
சிலையாக
எவ்வுயிரிடத்தும்
குறைவில்லா-அன்பை
நிறைமனதுடன் காட்டுவதன்றோ
மனித நேயம்!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக