என் இம்சை பாட்டி!!!
நிலவை படைத்தவானம் நீ
என் ருக்கு பாட்டி,,,,
சேவல் கூவலுக்கும்
காக்கை கரைதலுக்கும்
முன்னெழுந்து ஒலி இடுவாயே (சத்தம் )
அவையே எங்கள்
இம்சையான இனிய சுப்ரபாதம்..!!!
அதிகாலை சூரியனுக்கும்
அந்தி மாலை நிலவுக்கும்
நேரம் காட்டும் கடிகாரமே
உந்தன்பொற்பாதங்கள்,
சுறுசுறுப்பின் -சிகாமணி
கண்காணிப்பு புகைப்பட
கருவிகலோ உந்தன் இமைகள்
எஞ்சியதையும் தானம்செய்து
கஞ்சியையே புசிக்கும் கொடைவள்ளி
உன் வயதும்(85)
உன் சுறுசுறுப்பில்
ஓய்வெடுக்க மறுக்கிறது..!!
மழலையாயும்
பதினெட்டு வயது
பட்டாம்பூச்சியாய்
வலம் வருபவள்
என் ருக்கு பாட்டி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக