சனி

இனிய முதுநெல்லி ..!!

 என் இம்சை பாட்டி!!! 


நிலவை படைத்தவானம் நீ
என் ருக்கு பாட்டி,,,,
 
சேவல் கூவலுக்கும்
காக்கை கரைதலுக்கும்
முன்னெழுந்து ஒலி இடுவாயே (சத்தம் )
அவையே எங்கள்  
இம்சையான இனிய சுப்ரபாதம்..!!!
அதிகாலை சூரியனுக்கும் 
அந்தி மாலை நிலவுக்கும் 
நேரம் காட்டும் கடிகாரமே
உந்தன்பொற்பாதங்கள்,
சுறுசுறுப்பின் -சிகாமணி 
கண்காணிப்பு புகைப்பட 
கருவிகலோ உந்தன் இமைகள் 
 
படிக்காமல் பட்டம் பெறும் மருத்துவச்சி 
எஞ்சியதையும் தானம்செய்து 
கஞ்சியையே புசிக்கும் கொடைவள்ளி 
 
ஓய்வெடுக்கும்
உன் வயதும்(85)
உன் சுறுசுறுப்பில்
ஓய்வெடுக்க மறுக்கிறது..!!
 
மதிமங்கும் வயதிலும் 
மழலையாயும் 
பதினெட்டு வயது 
பட்டாம்பூச்சியாய் 
வலம் வருபவள் 
என் ருக்கு பாட்டி...
 
                                                     
 
 

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....