திங்கள்


முற்றுபுள்ளியில் சிறக்கும் ஆசைகள் 

தோன்றலின் எண்ணம் திரை-எதற்கு??
வானுக்கும் ஆழிக்கும் எல்லை-எதற்கு??

வாலிபத்தை தொலைத்துபின் தேடுவது-எதற்கு??
காலாவதி ஆனபின் காலத்தை தேடுவது-எதற்கு?

ஆசை அடக்கியப்பின் ஏக்கம்-எதற்கு??
தகுதி இருக்குமாயின் தயக்கம்-எதற்கு??

மீளா கனவுகள் தடை-எதற்கு??
வையகத்தில் வெற்றிடம் பல-அதில் 
தடம் படிக்க அச்சம்-எதற்கு..????

நீ முற்றும் இடத்தில் தொடரும் சிறகுகள்..!!!
ஆசைக்கு வேலி எதற்கு...!!!

- மாலதி ராமதாஸ்

கவிக்குயில் மதி எனும் புனைபெயரில் கவியெழுதி வருமிவர் முண்டாசு கவிதையில் வீழ்ந்து, மீசையில்லாகண்ணம்மாவாய் கவித்திட்டுபவள்.. 


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....